களவழி நாற்பது
26 - 30 of 40 பாடல்கள்
26. எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட
கைவாயிற்
கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல்
ஐவாய்
வயநாகங் கவ்வி விசும்பிவருஞ்
செவ்வா
யுவணத்திற் றோன்றும் புனனாடன்
தெவ்வாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
27. செஞ்சேற்றுட் செல்யானை சீறி
மிதித்தலால்
ஒண்செங்
குருதிகள் தொக்கீண்டி நின்றவை
பூநீர்
வியன்றமிடாப் போன்ற புனனாடன்
மேவாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
28. ஓடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப்
பீடுடை
வாளார் பிறங்கிய ஞாட்பினுட்
கேடகத்தோ
டற்ற தடக்கைகொண் டோடி
இகலன்வாய்த்
துற்றிய தோற்ற மயலார்க்குக்
கண்ணாடி
காண்பாரிற் றோன்றும் புனனாடன்
நண்ணாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
29. கடிகாவிற் காற்றுற் றெறிய
வெடிபாட்டி
வீற்றுவீற்
றோடு மயிலினம்போல் - நாற்றிசையும்
கேளி
ரிழந்தா ரலறுபவே செங்கட்
சினமால்
பொருத களத்து.
விளக்கவுரை :
30. மடங்க வெறிந்து மலையுருட்டு
நீர்போல்
தடங்கொண்ட
வொண்குருதி கொள்களி றீர்க்கு
மடங்கா
மறமொய்ம்பிற் சினமால்
அடங்காரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
