களவழி நாற்பது
21 - 25 of 40 பாடல்கள்
21. இணைவே லெழின்மருமத் திங்கப்புண்
கூர்ந்து
கணையலைக்
கொல்கிய யானை - துணையிலவாய்த்
தொல்வலி
யாற்றித் துளங்கினவாய் மெல்ல
நிலங்கால்
கவரு மலைபோன்ற செங்கட்
சினமால்
பொருத களத்து.
விளக்கவுரை :
22. இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ்
வரிநுதல்
ஆடியல்
யானைத் தடக்கை யொளிறுவாள்
ஓடா
மறவர் துணிப்பத் துணிந்தவை
கோடுகொ
ளொண்மதியை நக்கும்பரம் பொக்குமே
பாடா
ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன்
கூடாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
23. ஏற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து
நெய்த்தோர்ப்
புனலு ணிவந்தகளிற் றுடம்பு
செக்கர்கொள்
வானிற் கருங்கொண்மூப் போன்றவே
கொற்றவேற்
றானைக் கொடித்திண்டோர்ச் செம்பியன்
செற்றாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
24. திண்டோண் மறவ ரெறியத் திசைதோறும்
பைந்தலை
பாரிற் புரள்பவை - நன்கெனைத்தும்
பெண்ணையந்
தோட்டம் பெருவளி புக்கேற்ற
கண்ணார்
கமழ்தெரியற் காவிரி நீர்நாடன்
நண்ணாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
25. மலைகலங்கப் பாயு மலைபோ னிலைகொள்ளாக்
குஞ்சரம்
பாயக் கொடி யெழுந்து பொங்குபு
வானந்
துடைப்பன போன்ற புனனாடன்
மேவாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
