நல்வழி 26 - 30 of 40 பாடல்கள்
26. மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம்
தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த
சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப்
பறந்து போம்.
விளக்கவுரை :
27. ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்
டொன்றாகும்
அன்றி
அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத
முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும்
ஈசன் செயல்.
விளக்கவுரை :
28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது
கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர்
குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும்
சஞ்சலமே தான்.
விளக்கவுரை :
29. மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார்
யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா
தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார்
உலகத் தவர்.
விளக்கவுரை :
30. தாம்தாம்முன் செய்தவினை தாமே
அனுபவிப்பார்
பூந்தா
மரை யோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை
என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும்
போமோ விதி.
விளக்கவுரை :
