நல்வழி 21 - 25 of 40 பாடல்கள்
21. நீரும் நிழலும் நிலம்பொதியும்
நெற்கட்டும்
பேரும்
புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும்
வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த
தாமரையாள் தான்.
விளக்கவுரை :
22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப்
புதைத்துவைத்துக்
கேடுகெட்ட
மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான்
போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள்
அந்தப் பணம்.
விளக்கவுரை :
23. வேதாளம் சேருமே வெள்ளெருக்குப்
பூக்குமே
பாதாள
மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து
வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம்
சொன்னார் மனை.
விளக்கவுரை :
24. நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா
ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப்
பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி
இல்லா மனை.
விளக்கவுரை :
25. ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம்
அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும்
கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும்
பொல்லனாம் நாடு.
விளக்கவுரை :
