பழமொழி நானூறு
251 - 255 of 400 பாடல்கள்
251. மன்னவன் ஆணைக்கீழ் மற்றையார்
மீக்கூற்றம்
என்ன
வகையால் செயப் பெறுப? - புன்னைப்
பரப்புநீர்
தாவும் படுகடல் தண்சேர்ப்ப!
'மரத்தின்கீழ் ஆகா மரம்'.
விளக்கவுரை :
252. வழிபட் டவரை வலியராச் செய்தார்
அழிப்பினும்
ஆக்கினும் ஆகும் - விழுத்தக்க
பையமர்
மாலைப் பணைத்தோளாய்! பாத்தறிவென்
மெல்லக்
'கவுட்கொண்ட நீர்'.
விளக்கவுரை :
253. தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால்
நேர்செய் திருத்தல் - மலைமிசைக்
காம்பனுக்கும்
மென்தோளாய்! அஃதன்றோ 'ஓரறையுள்
பாம்போ(டு)
உடனுறையும் ஆறு'.
விளக்கவுரை :
254. கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து
குறிப்பறிந்து
மாற்றம்
உடையாரை ஆராயா(து) - ஆற்றவும்
முல்லை
புரையும் முறுவலாய் ! 'செய்வதென்
வல்லை
அரசாட் கொளின்?'
விளக்கவுரை :
255. உடைப்பெருஞ் செல்வத்து உயர்ந்த
பெருமை
அடக்கமில்
உள்ளத்தன் ஆகி - நடக்கையின்
ஒளளியன்
அல்லான்மேல் வைத்தல் 'குரங்கின்கைக்
கொள்ளி
கொடுத்து விடல்'.
விளக்கவுரை :