பழமொழி நானூறு
226 - 230 of 400 பாடல்கள்
226. தமராலும் தம்மாலும் உற்றால்ஒன்(று)
ஆற்றி
நிகராகிச்
சென்றாகும் அல்லர் - இவர்திரை
நீத்தநீர்த்
தண்சேர்ப்ப ! செய்தது 'உவவாதார்க்(கு)
ஈத்ததை
எல்லாம் இழவு'.
விளக்கவுரை :
24. ஊழ்
227. எவ்வம் துணையாய்ப் பொருள்முடிக்கும்
தாளாண்மை
தெய்வம்
முடிப்புழி என்செய்யும்? - மொய்கொண்டு
பூப்புக்கு
வண்டார்க்கும் ஊர! 'குறும்பியங்கும்
கோப்புக்
குழிச்செய்வ(து) இல்'.
விளக்கவுரை :
228. சுட்டிச் சொலப்படும் பேரறிவி
னார்கண்ணும்
பட்ட
விருத்தம் பலவானால் - பட்ட
பொறியின்
வகைய கருமம் அதனால்
'அறிவினை ஊழே அடும்'.
விளக்கவுரை :
229. அங்கண் விசும்பின் அகனிலாப்
பாரிக்கும்
திங்களும்
தீங்குறுதல் காண்டுமால் - பொங்கி
அறைப்பாய்
அருவி அணிமலை நாட!
'உறற்பால யார்க்கும் உறும்'.
விளக்கவுரை :
230. கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன்
மேற்சென் றதனால் - விழுமிய
வேண்டினும்
வேண்டா விடினும் 'உறற்பால
தீண்டா
விடுதல் அரிது'.
விளக்கவுரை :