இனியவை நாற்பது
21 - 25 of 40 பாடல்கள்
21. பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல்
இனிதே
அறம்புரிந்
தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும்
மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து
வாழ்தல் இனிது.
விளக்கவுரை :
22. வருவா யறிந்து வழங்கல் இனிதே
ஒருவர்பங்
காகாத ஊக்கம் இனிதே
பெருவகைத்
தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி
வாழ்தல் இனிது.
விளக்கவுரை :
23. காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு
பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும்
அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
சூதரைச்
சோர்தல் இனிது.
விளக்கவுரை :
24. வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே
ஒல்லுந்
துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லாது
காமுற் றிரங்கி இடர்ப்படார்
செய்வது
செய்தல் இனிது.
விளக்கவுரை :
25. ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
கைவாய்ப்
பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே
நில்லாத
காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா
விடுதல் இனிது.
விளக்கவுரை :
