பழமொழி நானூறு
206 - 210 of 400 பாடல்கள்
206. மறந்தானும் தாமுடைய தாம்போற்றின்
அல்லால்
சிறந்தார்
தமரென்று தேற்றார்கை வையார்
கறங்குநீர்க்
காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப !
'இறந்தது பேர்தறிவார் இல்'.
விளக்கவுரை :
207. அமையா இடத்தோர் அரும்பொருள்
வைத்தால்
இமையாது
காப்பினும் ஆகா - இமையோரும்
அக்காலத்(து)
ஓம்பி அமிழ்துகோட் பட்டமையால்
'நற்காப்பின் தீச்சிறையே நன்று'.
விளக்கவுரை :
208. ஊக்கி உழந்தொருவர் ஈட்டிய ஒண்பொருளை
நோக்குமின்
என்றிகழ்ந்து நொள்வியார் கைவிடுதல்
போக்கில்நீர்
தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப!
'காக்கையைக் காப்பிட்ட சோறு'.
விளக்கவுரை :
209. தொடிமுன்கை நல்லாய்அத் தொக்க
பொருளைக்
குடிமகன்
அல்லான்கை வைத்தல் - கடிநெய்தல்
வேரி
கமழும் விரிதிரைத் தண்சேர்ப்ப!
'மூரியைத் தீற்றிய புல்'.
விளக்கவுரை :
210. முன்னை யுடையது காவாது இகந்திருந்து
பின்னையஃ
தாராய்ந்து கொள்குறுதல் - இன்னியல்
மைத்தடங்கண்
மாதராய்! அஃதாதல் 'வெண்ணெய்மேல்
வைத்து
மயில்கொள்ளு மாறு'.
விளக்கவுரை :