பழமொழி நானூறு
201 - 205 of 400 பாடல்கள்
201. வருவாய் சிறிதெனினும் வைகலும்
ஈண்டின்
பெருவாய்த்தாய்
நிற்கும் பெரிதும் - ஒருவாறு
ஒளியீண்டி
நின்றால் உலகம் விளக்கும்
'துளியீண்டில் வெள்ளம் தரும்'.
விளக்கவுரை :
202. உள்ளூர் அவரால் உணர்ந்தாம்
முதலெனினும்
எள்ளாமை
வேண்டும் இலங்கிழாய்! - தள்ளாது
அழுங்கல்
முதுபதி 'அங்காடி மேயும்
பழங்கன்று
ஏறாதலும் உண்டு'.
விளக்கவுரை :
203. களமர் பலரானும் கள்ளம் படினும்
வளமிக்கார்
செல்வம் வருந்தா - விளைநெல்
அரிநீர்
அணைதிறக்கும் ஊர! 'அறுமோ
நரிநக்கிற்(று)
என்று கடல்'.
விளக்கவுரை :
204. நாடறியப் பட்ட பெருஞ்செல்வர்
நல்கூர்ந்து
வாடிய
காலத்தும் வட்குபவோ! - வாடி
வலித்துத்
திரங்கிக் கிடந்தே விடினும்
'புலித்தலையை நாய்மோத்தல் இல்'
விளக்கவுரை :
22. பொருளைப் பெறுதல்
205. தந்தம் பொருளும் தமர்கண் வளமையும்
முந்துற
நாடிப் புறந்தரல் ஓம்புக
அந்தண்
அருவி மலைநாட! சேணோக்கி
'நந்துநீர் கொண்டதே போன்று'.
விளக்கவுரை :