கார் நாற்பது 16 - 20 of 40 பாடல்கள்



கார் நாற்பது 16 - 20 of 40 பாடல்கள்

16. கருங்குயில் கையற மாமயி லாலப்
பெருங்கலி வான முரறும் - பெருந்தோள்
செயலை யிளந்தளி ரன்னநின் மேனிப்
பசலை பழங்கூண் கொள்.

விளக்கவுரை :

17. அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப்
பறைக்குர லேறோடு பெளவம் பருகி
உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை
கொண்டன்று பேதை நுதல்.

விளக்கவுரை :

18. கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே
நல்லிசை யேறொடு வான நடுநிற்பச்
செல்வர் மனம்போற் கவினீன்ற நல்கூர்ந்தார்
மேனிபோற் புல்லென்ற காடு.

விளக்கவுரை :

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது

19. நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன - பைங்கோற்
றொடிபொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு.

விளக்கவுரை :

20. வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன
ஆறும் பதமினிய வாயின - ஏறோ
டருமணி நாக மனுங்கச் செருமன்னர்
சேனைபோற் செல்லு மழை.

விளக்கவுரை :

கார் நாற்பது, மதுரைக் கண்ணங் கூத்தனார், kaar narpathu, madurai kannang koothanaar, tamil books