கார் நாற்பது 11 - 15 of 40 பாடல்கள்



கார் நாற்பது 11 - 15 of 40 பாடல்கள்

11. புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார்
வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும்
அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல்
பூங்குலை யீன்ற புறவு.

விளக்கவுரை :

12. மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய்
ஐயந்தீர் காட்சி யவர்வருதல் திண்ணிதாம்
நெய்யணி குஞ்சரம் போல விருங்கொண்மூ
வைகலு மேரும் வலம்.

விளக்கவுரை :

13. ஏந்தெழி லல்குலா யேமார்ந்த காதலர்
கூந்தல வனப்பிற் பெயறாழ - வேந்தர்
களிறெறி வாளரவம் போலக்கண் வெளவி
ஒளிறுபு மின்னு மழை.

விளக்கவுரை :

14. செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர்
வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய்
முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார்
மெல்ல வினிய நகும்.

விளக்கவுரை :

15. திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர்
குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத்
திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி
இன்குழ லூதும் பொழுது.

விளக்கவுரை :

கார் நாற்பது, மதுரைக் கண்ணங் கூத்தனார், kaar narpathu, madurai kannang koothanaar, tamil books