கொன்றை வேந்தன் - உயிர் வருக்கம்



கொன்றை வேந்தன் - உயிர் வருக்கம்

கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

விளக்கவுரை :

உயிர் வருக்கம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

விளக்கவுரை :

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

விளக்கவுரை :

3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.

விளக்கவுரை :

4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.

விளக்கவுரை :

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

விளக்கவுரை :

6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

விளக்கவுரை :

7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.

விளக்கவுரை :

8. ஏவா மக்கள் மூவா மருந்து.

விளக்கவுரை :

9. ஐயம் புகினும் செய்வன செய்.

விளக்கவுரை :

10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.

விளக்கவுரை :

11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.

விளக்கவுரை :

12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.

விளக்கவுரை :

13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.

விளக்கவுரை :

கொன்றை வேந்தன், ஔவையார், kontrai venthan, avvaiyaar, tamil books