ஐங்குறு நூறு
96 - 100 of 500 பாடல்கள்
96. அணிநடை எருமை ஆடிய அள்ளல்
மணிநிற
நெய்தல் ஆமபலொடு கலிக்கும்
கழனி
ஊரன் மகளிவள்
பழன்
ஊரன் பாயல்இன் துணையே.
விளக்கவுரை :
97. பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்
கருந்தாள்
எருமைக் கன்று வெரூஉம்
பொய்கை
ஊரன் மகளிவள்
பொய்கைப்
பூவினும் நறுந்தண் ணியளே.
விளக்கவுரை :
98. தண்புணல் ஆடும் தடங்கோட்டு எருமை
திண்பிணி
அம்பியின் தோன்றும் ஊர
ஒண்டொடி
மடமகள் இவளினும்
நுந்தையும்
யாயும் துடியரோ நின்னே.
விளக்கவுரை :
99. பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை
கழனி
யெருமை கதிரொடு மயக்கும்
பூக்கஞல்
ஊரன் மகளிவள்
நோய்க்குமருந்
தாகிய பணைத்தோ ளோளே.
விளக்கவுரை :
100. புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை
மணலாடு
சிமையத்து எருமை கிளைக்கும்
யாணர்
ஊரன் மகளிவள்
பாணர்
நரம்பினும் இன்கிள வியளே.
விளக்கவுரை :
