திரிகடுகம்
61 - 65 of 100 பாடல்கள்
அமைச்சர்களின் கோள்
61. ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்
எய்துவது
எய்தாமை முற்காத்தல் - வைகலும்
மாறேற்கும்
மன்னர் நிலைஅறிதல் இம்மூவர்
சீரேற்ற
பேரமைச்சர் கோள்.
விளக்கவுரை :
மக்களை இழப்பவர்
62. நன்றிப் பயன்தூக்கா நாணிலியும்
சான்றோர்முன்
மன்றில்
கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி
வைத்த
அடைக்கலங் கொள்வானும் இம்மூவர்
எச்சம்
இழந்துவாழ் வார்.
விளக்கவுரை :
நன்மையைத் தாராதவை
63. நோவஞ்சா தாரொடு நட்பும்
விருந்தஞ்சும்
ஈர்வளையை
இல்லத் திருத்தலும் - சீர்பயவாத்
தன்மையி
லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை
பயத்தல் இல.
விளக்கவுரை :
கற்புடையாளின் கடமைகள்
64. நல்விருந் தோம்பலின் நட்டாளாம்
வைகலும்
இல்புறஞ்
செய்தலின் ஈன்றதாய் - தொல்குடியின்
மக்கள்
பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்
கற்புடையாள்
பூண்ட கடன்.
விளக்கவுரை :
மிக்க வருத்தத்தைத் தருவன
65. அச்சம் அலைகடலின் தோன்றலும்
ஆர்வுற்ற
விட்டகல
கில்லாத வேட்கையும் - கட்டிய
மெய்ந்நிலை
காணா வெகுளியும் இம்மூன்றும்
தம்நெய்யில்
தாம்பொரியு மாறு.
விளக்கவுரை :
