கைந்நிலை 56 - 60 of 60
பாடல்கள்
56. நுரைதரும் ஓதம் கடந்துஎமர் தந்த
கருங்கரை
வன்மீன் கவரும்புள் ஓப்பின்
புகரில்லேம்
யாமிருப்பப் பூங்கழிச் சேர்ப்பன்
நுகர்வனன்
உண்டான் நலம்.
(துறை : வரைபொருள் பிரிவு நீட்டித்த
வழித் தலைவி தோழிக்குக் கூறியது).
விளக்கவுரை :
57. கொடுவாய்ப் புணரன்றில் கொய்மடல்
பெண்ணைத்
தடவுக்
கிளைபயிரும் தண்கடல் சேர்ப்பன்
நிலவுக்
கொடுங்கழி நீந்திடும் முன்றில்
புலவுத்
திரைபொருத போழ்து.
(துறை : தோழி இரவுக் குறியிடம்
தலைவிக்கு உணர்த்தியது).
விளக்கவுரை :
58. சுறாஎறி குப்பை சுழலும் கழியுள்
இறாஎறி
ஓதம் அலற இரைக்கும்
உறாஅநீர்ச்
சேர்ப்பனை உள்ளி இருப்பின்
பொறாஅஎன்
முன்கை வளை.
(துறை : தலைவி தோழியிடம்
பிரிவாற்றாமை கூறி வருந்துதல்).
விளக்கவுரை :
59. தாழை குருகுஈனும் தண்ணந் துறைவனை
மாழை
மானோக்கின் மடமொழி - நூழை
நுழையும்
மடமகன் யார்கொல் என்றுஅன்னை
புழையும்
அடைத்தாள் கதவு.
(துறை : இரவு குறிக்கண்
சிறைப்புறத்தானாக நிற்கத் தோழி தலைவிக்குக் கூறுவாளாகப்
படைத்து மொழிந்தது.)
விளக்கவுரை :
60. பொன்னம் பசலையும் தீர்ந்தது
பூங்கொடி
தென்னவன்
கொற்கைக் குருகுஇரிய - மன்னரை
ஓடுபுறம்
கண்ட ஒண்தாரான் தேர்இதோ
கூடல்
அணைய வரவு.
(துறை : வினை முடித்து மீண்ட தலைமகன்
வரவு கண்ட தோழி தலைவிக்குக் கூறியது).
விளக்கவுரை :
கைந்நிலை முற்றிற்று.
