திரிகடுகம் 1
- 5 of 100 பாடல்கள்
காப்பு
கண்ணகல்
ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்
தண்ணறும்
பூங்குருந்தம் பாய்த்ததூஉம் - நண்ணிய
மாயச்
சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ
வண்ணன் அடி.
விளக்கவுரை :
நூல்
1. அருந்ததிக் கற்பினார் தோளும்
திருந்திய
தொல்குடியின்
மாண்டார் தெடார்ச்சியும் - சொல்லின்
அரில்அகற்றும்
கேள்வியார் நட்பும் இம்மூன்றும்
திரிகடுகம்
போலு மருந்து.
விளக்கவுரை :
ஒழுக்கமுடையார் தொழில்கள்
2. தன்குணம் குன்றாத் தகைமையும்
தாவில்சீர்
இன்குணத்தார்
ஏவினசெய்தலும் - நன்குணர்வின்
நான்மறை
யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
மென்முறை
யாளர் தொழில்.
விளக்கவுரை :
அறியாமையால் வரும் கேடு
3. கல்லார்க்கு இனனாய் ஒழுகலும்
காழ்கொண்ட
இல்லாளைக்
கோலால் புடைத்தலும் - இல்லம்
சிறியாரைக்
கொண்டு புகலுமிம் மூன்றும்
அறியாமை
யால்வரும் கேடு.
விளக்கவுரை :
சாவதற்குரியவன் தொழில்கள்
4. பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற
பெற்றத்துள்
கோலின்றிச் சேறலும் - முற்றன்னைக்
காய்வானைக்
கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும்
சாவ
வுறுவான் தொழில்.
விளக்கவுரை :
அருந்துன்பம் காட்டும் நெறி
5. வழங்காத் துறையிழிந்து
நீர்ப்போக்கும் ஒப்ப
விழைவிலாப்
பெண்டீர்த்தோள் சேர்வும் - உழந்து
விருந்தினனாய்
வேற்றூர் புகலும் இம்மூன்றும்
அருந்துயரம்
காட்டு நெறி.
விளக்கவுரை :
