பழமொழி நானூறு 51 - 55 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 51 - 55 of 400 பாடல்கள்

7. வெகுளாமை

51. இறப்பச் சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினால் மாண்டார் வெகுளார் - திறத்துள்ளி
'நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர்
இல்லம் சுடுகலா வாறு'.

விளக்கவுரை :

52. ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை
மாறி ஒழுகல் தலையென்ப - ஏறி
வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப !
'தெளியானைத் தேறல் அரிது'.

விளக்கவுரை :

53. உற்றதற் கெல்லாம் உரஞ்செய்ய வேண்டுமோ?
கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
நெற்செய்யப் புல்தேய்ந்தாற் போல 'நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்'.

விளக்கவுரை :

54. எய்தா நகைச்சொல் எடுத்துரைக்கப் பட்டவர்
வைதாராக் கொண்டு விடுவர்மன் - அஃதால்
புனற்பொய்கை ஊர! 'விளக்கெலி கொண்டு
தனக்குநோய் செய்து விடல்'.

விளக்கவுரை :

55. தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க - பரிவில்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே
'அம்பலம் தாழ்க்கூட்டு வார்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books