பழமொழி நானூறு 46 - 50 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 46 - 50 of 400 பாடல்கள்

46. நெடியது காண்கிலாய் நீயொளியை நெஞ்சே!
கொடியது கூறினாய் மன்ற - அடியுளே
'முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் கண்டு விடும்'.

விளக்கவுரை :

47. தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்
மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்
'ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும்'

விளக்கவுரை :

48. மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை
ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்
நற்கெளி தாகி விடினும் நளிர்வரைமேல்
'கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்'.

விளக்கவுரை :

49. நீர்த்தகவு இல்லார் நிரம்பாமைத் தந்நலியின்
கூர்த்தவரைத் தாம்நலிதல் கோளன்றால் - சான்றவர்க்குப்
பார்த்தோடிச் சென்று கதம்பட்டு 'நாய்கவ்வின்
பேர்த்துநாய் கவ்வினார் இல்'.

விளக்கவுரை :

50. காழார மார்ப! கசடறக் கைகாவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர்
உள்ளத்துக் கொண்டுநேர்ந்(து) ஊக்கல் 'குறுநரிக்கு
நல்லாநா ராயம் கொளல்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books