திரிகடுகம்
46 - 50 of 100 பாடல்கள்
அறிவுடையார் குறுகாதவை.
46. கால்தூய்மை யில்லாக் கலிமாவும்
காழ்கடிந்து
மேல்தூய்மை
யில்லாத வெங்களிறும் - சீறிக்
கறுவி
வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்
குறுகார்
அறிவுடை யார்.
விளக்கவுரை :
காக்கப்பட வேண்டியவை
47. சில்சொற் பெருந்தோள் மகளிரும்
பல்வகையும்
தாளினால்
தந்த விழுநிதியும் - நாடோறும்
நாத்தளிர்ப்ப
ஆக்கிய உண்டியும் இம்மூன்றும்
காப்பிகழ்
ஆகாப் பொருள்.
விளக்கவுரை :
மெய்ப்பொருள் உணர்ந்தவர்
48. வைதலை இன்சொல்லாக் கொள்வானும்
நெய்பெய்த
சோறென்று
கூழை மதிப்பானும் - ஊறிய
கைப்பதனைக்
கட்டியேன்று உண்பானும் இம்மூவர்
மெய்ப்பொருள்
கண்டுவாழ் வார்.
விளக்கவுரை :
எவருக்கும் பயனற்றவர்
49. ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச்
சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி
அம்மனை
தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
இம்மைக்கு
உறுதியில் லார்.
விளக்கவுரை :
மழையைக் குறைப்பவர்
50. கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும்
வேந்தனும்
உள்பொருள்
சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந்து
எல்லை கடப்பாளும் இம்மூவர்
வல்லே
மழையறுக்கும் கோள்.
விளக்கவுரை :
