கைந்நிலை 41 - 45 of 60 பாடல்கள்


கைந்நிலை 41 - 45 of 60 பாடல்கள்

41. பொய்கைநல் லூரன் திறன்கிளப்ப என்னுடையை?
அஃதன்று எனினும் அறிந்தோம்யாம் - செய்தி
நெறியின் இனியசொல் நீர்வாய் மழலைச்
சிறுவன் எனக்குடைமை யால்.

(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.)

விளக்கவுரை :

42. நீத்தம் நீர்ஊரன் நிலைமையும் வண்ணமும்
யார்க்கு ரைத்திபாண? அதனால்யாம் என்செய்தும்?
கூத்தனாக் கொண்டு குறைநீர் உடையையேல்
ஆட்டுவித்து உண்ணினும் உண்.

(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.)

விளக்கவுரை :

43. போதவிழ் தாமரைப் பூந்துறை ஊரனைத்
தாதவிழ் கோதைத் தகையிலார் தாம்புலப்பர்
ஏதின்மை சொல்லி இருப்பர் பிறர்மகளிர்
பேதமை தம்மேலே கொண்டு.

(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.)

விளக்கவுரை :

44. தன்துறை ஊரன் தடமென் பணைத்தோளாய்
வண்டூது கோதை வகைநாடிக் - கொண்டிருந்து
கோல வனமுலையும் புல்லினான் என்றெடுத்துச்
சாலவும் தூற்றும் அலர்.

(துறை : வாயிலாக வந்த தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது.)

விளக்கவுரை :

45. மூத்தேம் இனிப்பாண முன்னாயின் நாம்இளையேம்
கார்த்தண் கலிவயல் ஊரான் கடிதுஎமக்குப்
பாத்தில் பயமொழி பண்பு பலகூறி
நீத்தல் அறிந்திலேம் இன்று.

(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.)

விளக்கவுரை :

கைந்நிலை, புல்லங்காடனார், kainilai, pullankadanaar, tamil books