கார் நாற்பது 36 - 40 of 40 பாடல்கள்



கார் நாற்பது 36 - 40 of 40 பாடல்கள்

வினைமுற்றி மீளுந் தலைமகள் பாகற்குச் சொல்லியது

36. சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப
ஈர்ந்தண் தளவந் தகைந்தன - சீர்த்தக்க
செல்வ மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர்
நல்விருந் தாக நமக்கு.

விளக்கவுரை :

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது

37. கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி
இருங்க லிறுவரை யேறி யியுர்க்கும்
பெரும்பதக் காலையும் வாரார்கொல் வேந்தன்
அருந்தொழில் வாய்த்த நமர்.

விளக்கவுரை :

தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தது

38. புகர்முகம் பூழிப் புரள வுயர்நிலைய
வெஞ்சின் வேழம் பிடியோ டிசைந்தாடுந்
தண்பதக் காலையும் வாரா ரெவன்கொலோ
ஒண்டொடி யூடு நிலை.

விளக்கவுரை :

39. அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த
கருங்குர னொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புன மேர்க்கடி கொண்டார் பெருங்கெளவை
ஆகின்று நம்மூ ரவர்க்கு.

விளக்கவுரை :

பருவம் வந்தமையால் தலைவர் வருதல் ஒருதலையெனக் கூறித் தோழி தலைமகளை ஆற்றுவித்தது

40. வந்தன செய்குறி வாரா ரவரென்று
நொந்த வொருத்திக்கு நோய்தீர் மருந்தாகி
இந்தின் கருவண்ணங் கொண்டன் றெழில்வானம்
நந்துமென் பேதை நுதல்.

விளக்கவுரை :

கார் நாற்பது முற்றிற்று

கார் நாற்பது, மதுரைக் கண்ணங் கூத்தனார், kaar narpathu, madurai kannang koothanaar, tamil books