திரிகடுகம்
26 - 30 of 100 பாடல்கள்
உயர்ந்தவர் எனப்படுபவர்
26. ஒல்வ தறியும் விருந்தினனும்
ஆருயிரைக்
கொல்வ
திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதின்
சீலமினி
துடைய ஆசானும் இம்மூவர்
ஞாலம்
எனப்படு வார்.
விளக்கவுரை :
தூயவரின் செயல்கள்
27. உண்பொழுது நீராடி உண்டலும்
என்பெறினும்
பால்பற்றிச்
சொல்லா விடுதலும் - தோல்வற்றிச்
சாயினுஞ்
சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்
தூஉய
மென்பார் தொழில்.
விளக்கவுரை :
உமி குத்திக் கை வருந்துவார்
28. வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு
நோன்பிலியும்
இல்லது
காமுற்று இருப்பானும் - கல்வி
செவிக்குற்றம்
பார்த்திருப்பானும் இம்மூன்றும்
உமிக்குத்திக்
கைவருந்துவார்.
விளக்கவுரை :
கற்றவர் கருத்து.
29. பெண்விழைந்து பின்செலினும்
தன்செலவிற் குன்றாமை
கண்விழைந்து
கையுறினும் காதல் பொருட்கின்மை
மண்விழுந்து
வாழ்நாள் மதியாமை இம்மூன்றும்
நுண்விழைந்த
நூலவர் நோக்கு.
விளக்கவுரை :
நிலைத்த புகழை உடையவர்
30. தன்நச்சிச் சென்றாரை எள்ளா
வொருவனும்
மன்னிய
செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்
என்றும்
அழுக்காறி கந்தானும் இம்மூவர்
நின்ற
புகழுடை யார்.
விளக்கவுரை :
