திரிகடுகம்
21 - 25 of 100 பாடல்கள்
நல்லவரின் கொள்கைகள்
21. வருவாயுள் கால்வழங்கி வாழ்தல்
செருவாய்ப்பச்
செய்தவை
நாடாச் சிறப்புடைமை - எய்தப்
பலநாடி
நல்லவை கற்றல் இம்மூன்றும்
நலமாட்சி
நல்லவர் கோள்.
விளக்கவுரை :
வீடு அடையலாம்
22. பற்றென்னும் பாசத் தளையும்
பலவழியும்
பற்றறா
தோடும் அவாத்தேரும் - தெற்றெனப்
பொய்த்துரை
யென்னும் பகையிருளும் இம்மூன்றும்
வித்தற
வீடும் பிறப்பு.
விளக்கவுரை :
அறப்பயனைக் கட்டும் கயிறு
23. தானம் கொடுக்கும் தகைமையும்
மானத்தார்
குற்றம்
கடிந்த ஒழுக்கமும் - தெற்றெனப்
பல்பொருள்
நீங்கிய சிந்தையும் இம்மூன்றும்
நல்வினை
யார்க்கும் கயிறு.
விளக்கவுரை :
நரகத்தைப் போன்றவை
24. காண்டகு மென்றோள் கணிகைவா யின்சொல்லும்
தூண்டிலின்
உட்பொதிந்த தேரையும் - மாண்டசீர்க்
காழ்த்த
பகைவர் வணக்கமும் இம்மூன்றும்
ஆழ்ச்சிப்
படுக்கும் அளறு.
விளக்கவுரை :
அறிஞர் கொள்ளாத உணவுகள்
25. செருக்கினால் வாழும் சிறியவனும்
பைத்தகன்ற
அல்குல்
விலைபகரும் ஆய்தொடியும் - நல்லவர்க்கு
வைத்த
அறப்புறம் கொன்றானும் இம்மூவர்
கைத்துண்ணார்
கற்றறிந் தார்.
விளக்கவுரை :
