நான்மணிக்கடிகை
21 - 25 of 106 பாடல்கள்
21. பெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள்
தானதிர்க்கும்
கற்றான்
அதிர்ப்பின் பொருளதிர்க்கும் - பற்றிய
மண்ணதிர்ப்பின்
மன்னவன் கோலதிர்க்கும் பண்ணதிர்ப்பின்
பாடல்
அதிர்ந்து விடும்.
விளக்கவுரை :
22. மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை
தான்செல்லும்
திசைக்குப்பாழ்
நட்டோரை இன்மை இருந்த
அவைக்குப்பாழ்
மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்
கற்றறிவு
இல்லா உடம்பு.
விளக்கவுரை :
23. மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை
ஒருவனைப்
பொய்சிதைக்கும்
பொன்போலும் மேனியைப் - பெய்த
கலஞ்சிதைக்கும்
பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்
கூடார்கண்
கூடி விடின்.
விளக்கவுரை :
24. புகழ்செய்யும் பொய்யா விளக்கம்
இகந்தொருவர்ப்
பேணாது
செய்வது பேதைமை - காணாக்
குருடனாச்
செய்வது மம்மர் இருள்தீர்ந்த
கண்ணாரச்
செய்வது கற்பு.
விளக்கவுரை :
25. மலைப்பினும் வாரணந் தாங்கும்
அலைப்பினும்
அன்னேயென்
றோடுங் குழவி சிலைப்பினும்
நட்டார்
நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார்
உடனுறையும்
காலமும் இல்.
விளக்கவுரை :