கைந்நிலை 11 - 15 of 60 பாடல்கள்


கைந்நிலை 11 - 15 of 60 பாடல்கள்

11. எறிகிளர் கேழல் கிளைத்திட்ட பூமி
பொறிகிளர் மஞ்ஞை புகன்று குடையும்
முறிகிளர் நன்மலை நாடன் வருமே
அரிதுரைத்திவ் இல்லில் நமக்கு.

(துறை : தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்)

விளக்கவுரை :

12. நாக நறுமலர்நாள் வேங்கைப் பூவிரவிக்
கேசம் அணிந்த கிளர்எழிலோன் ஆகம்
முடியுங் கொல் என்றுமுனிவான் ஒருவன்
வடிவேல்கை ஏந்தி வரும்.

(துறை : தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்)

விளக்கவுரை :

2. பாலை

13. கடுகி அதர்அலைக்கும் கல்சூழ் பதுக்கை
விடுவில் எயினர்தம் வீளைஓர்த் தோடும்
நெடுவிடை அத்தம் செலவுரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண்.

(துறை : வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்).

விளக்கவுரை :

14. கதநாய் துரப்ப........................................
..................................................... அவிழும்
புதல்மாறு வெங்கானம் போக்குரைப்ப நில்லா
முதன்..........................................................

(துறை : வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்).

விளக்கவுரை :

15. ...............................................................
....................................................................
கடுங்கதிர் வெங்கானம் பல்லாருட்கண் சென்றார்
கொடுங்கல் மலை............................................

(துறை: சென்ற செய்யுளில் கூறப்பட்டதாக இருக்கலாம்).

விளக்கவுரை :

கைந்நிலை, புல்லங்காடனார், kainilai, pullankadanaar, tamil books