இன்னிலை 1 - 5 of 45 பாடல்கள்



இன்னிலை 1 - 5 of 45 பாடல்கள்

கடவுள் வாழ்த்து

வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
வாலிழை பாகத் தமரிய கொழுவேல்
கூற்றங் கதழ்ந் தெறி கொன்றையன்
கூட்டா உலகங் கெழீஇய மெலிந்தே.
                                                - பாரதம் பாடிய பெருந்தேவனார்

விளக்கவுரை :

1. அறப்பால்

1. அன்றமரில் சொற்ற அறவுரைவீழ் தீக்கழுது
மன்றுயர்ந்து போந்த வகைதேர்மின் - பொன்றா
அறமறிந்தோன் கண்ட அறம்பொருள்கேட்(டு) அல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு.

விளக்கவுரை :

2. பொருள்விழையார் போற்றார் உடல்நலன் நம்மை
அருள்விழையார் அஃதே முழுஎவ்வம் பாய்நீல்
இருள்இழையார் வீழ்வார்மேல் பாலஆக்கார் ஆம்ஆ(று)
அருள்இழையார் தாமும் அது.

விளக்கவுரை :

3. கோலப் புறவின் குரல்கூவிப் புள்சிமிழ்ந்தோன்
காலில் தளைபரப்பச் சீர்ஒலிக்கும் - மாலின்
வரிநிழல் தாம்எய்தார் தீப்பழுவத்(து) உய்ப்பர்
உரிமை இவண்ஒரா தார்.

விளக்கவுரை :

4. கழிவிரக்கங் கொள்ளார் கதழ்வாளார் வேர்த்துப்
பழிமுறுகக் கோடார் பயன்பேர்த்(து) - அழிமுதலை
இல்லம்கொண்(டு) ஆக்கார் இடும்பைத் தளைகணப்பா
நல்லறனை நாளணிகொள் வார்.

விளக்கவுரை :

5. திரைந்த விரிக்கின் திரைப்பின்நா வாய்போல்
உரைத்த உரையதனைக் கேட்டும் - உரைத்த
பயன்தவர் செய்வார் சிலரேதம் நெஞ்சத்(து)
இயன்றவா செய்வார் பலர்.

விளக்கவுரை :

இன்னிலை, பொய்கையார், innilai, poigaiyaar, tamil books