இன்னிலை 26 - 30 of 45 பாடல்கள்
26. தூவி நெருஞ்சிக்காய் நீர்முள்ளி தும்பையலர்
காவியன சேல்கண் குறுந்தொடியார் -
ஆவிக்கு
இனியர் இணைசேரார் ஈர்ங்கண் மாஞாலத்
தனிமைக்(கு) அவரோர் கரி.
விளக்கவுரை :
27. காமம்வீழ் இன்பக் கடலாமே காதலரின்
ஏம இருக்கையே தூந்திரையாம் - |ஏமத்(து)ஈண்டு
ஆம்பரலே தோன்றும் அளியூடல்
ஆம்பரவில்
தெற்றித் தெறிப்பாம் ஒளிஒளிபாய்
கண்ணேசீர்த்(து)
உற்றுகப்பாய்ப் பெற்ற மகவு.
விளக்கவுரை :
28. கறங்குபறை காணா வுறுவூனைக் காதல்
பிறங்கறை நாவாகும் அஃதே -
திறம்இரங்கி
ஊடி உணர்வாரே தாமிசைவார் பல்காலம்
ஈடில தோர்இன்ப விருந்து.
விளக்கவுரை :
29. தோற்றாரே வெல்வர் துணைமிசைவார் கோட்டியானை
யேற்றுக் கழல்தொடியார் மிக்காரை
யார்வரைவர்
போற்றளி கூடல் கரி.
விளக்கவுரை :
30. காதல் விரிநிலத்(து) ஆரா வகைகாணார்
சாதல்நன் றென்ப தகைமையோர் - காதலும்
ஆக்கி அளித்தழிக்கும் கந்தழியின்
பேருருவே
நோக்கிலரை நோவ தெலன்.
விளக்கவுரை :
