திணை மொழி ஐம்பது 16 - 20 of 50 பாடல்கள்
16. கருங்கால் மராஅம் நுணாவோ(டு) அலர
இருஞ்சிறை வண்டினம் பாலை முரல
அரும்பிய முள்ளெயிற்(று) அஞ்சொல்
மடவாய்
விரும்புநாம் செல்லும் இடம்.
விளக்கவுரை :
17. கல்லதர் வாயில் கருந்துடி கள்பம்பும்
வில்லுழுது வாழ்நர் குறும்புள்ளும்
போவர்கொல்
எல்வனை மென்தோள் நெகிழப் பொருள்நசைஇ
நல்கா துறந்த நமர்.
விளக்கவுரை :
18. கதிர்சுடக் கண்ணுடைந்து முத்தம் சொரியும்
வெதிர்பிணங்கும் சோலை வியன்கானம்
செல்வார்க்(கு)
எதிர்வன போல்இலவே எவ்வளையோ கொன்னே
உதிர்வன போல உள.
விளக்கவுரை :
19. கலையொடு மான்இரங்கும் கல்லதர் அத்தம்
நிலைஅஞ்சி நீள்சுரத்(து)
அல்குவர்கொல் தோழி!
முலையொடு சோர்கின்ற பொன்வண்ணம்
அன்னோ
வளையொடு சோரும்என் தோள்.
விளக்கவுரை :
20. ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ்சுரம்
பாற்றினம் சேரப் படுநிழல் கண்டஞ்சிக்
கூற்றின வல்வில் விடலையோ(டு)
என்மகள்
ஆற்றுங்கொல் ஐய நடந்து.
விளக்கவுரை :
