பழமொழி நானூறு 16 - 20 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 16 - 20 of 400 பாடல்கள்

16. கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்
சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் - எற்றெனின்
தானும் நடவான் 'முடவன் பிடிப்பூணி
யானையோ டாடல் உறவு'.

விளக்கவுரை :

3. அவையறிதல்

17. கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்
வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர் - வேட்கையால்
வண்டு வழிபடரும் வாட்கண்ணாய் ! 'தோற்பன
கொண்டு புகாஅர் அவை'.

விளக்கவுரை :

18. ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு
இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா
பெருவரை நாட! சிறிதேனும் 'இன்னாது
இருவர் உடனாடல் நாய்'.

விளக்கவுரை :

19. துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி
மொழிந்தால் மொழியறியான் கூறல் 'முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு'.

விளக்கவுரை :

20. கல்லாதும் கேளாதும் கற்றாரவை நடுவண்
சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்(று) - எல்லருவி
பாய்வரை நாட! 'பரிசழிந் தாரோடு
தேவரும் ஆற்றல் இலர்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books