திணை மொழி ஐம்பது 31 - 35 of 50 பாடல்கள்
4. மருதம்
31. பழனம் படிந்த படுகோட்(டு) எருமை
கழனி வினைஞர்க்(கு) எதிர்ந்த
பறைகேட்(டு)
உரனிழிந்(து) ஓடும் ஒலிபுனல் ஊரன்
கிழமை யுடையன்என் தோட்டு.
விளக்கவுரை :
32. கணைக்கால் நெடுமருது கான்ற நறுந்தா(து)
இணைக்கால் நீலத்(து) இதழ்மேல்
சொரியும்
பணைத்தாள் கதிர்ச்செந்நெல் பாய்வயல்
ஊரன்
இணைத்தான் எமக்குமோர் நோய்.
விளக்கவுரை :
33. கடையாயார் நட்பேபோல் காஞ்சிநல் ஊர!
உடைய இளநலம் உண்டாய் - கடைய
கதிர்முலை ஆகத்துக் கண்ணன்னார் சேரி
எதிர்நலம் ஏற்றுநின் றாய்.
விளக்கவுரை :
34. செந்நெல் விளைவய லூரன் சிலபகல்
தன்னலம் என்அலார்க்(கு) ஈயான்
எழுபாண!
பாரித்த அல்குல் பணைத்தோளார்
சேரியுள்
வாரிக்குப் புக்குநின் றாய்.
விளக்கவுரை :
35. வேனிற் பருவத்(து) எதிர்மலரேல் தூதும்
கூனிவண்(டு) அன்ன குளிர்வயல்
நல்லூரன்
மாணிழை நல்லார் இளநலம் உண்டவர்
மேனி ஒழிய விடும்.
விளக்கவுரை :
