நல்வழி 1 - 5 of 40 பாடல்கள்
கடவுள் வாழ்த்து
பாலும்
தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும்
கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக்
கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத்
தமிழ் மூன்றும் தா
விளக்கவுரை :
1. புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள்
செய்தஅவை
மண்ணில்
பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய
வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய
நன்மை செயல்.
விளக்கவுரை :
2. சாதி இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால்
நீதி
வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார்
பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில்
உள்ள படி.
விளக்கவுரை :
3. இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு)
இதன்றே
இடும்பொய்யை
மெய்யென்(று) இராதே - இடுங்கடுக
உண்டாயின்
உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக்
கொண்டாடும் வீடு.
விளக்கவுரை :
4. எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய்
ஒண்ணாது
புண்ணியம்
வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய்
விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம்
ஆகும் அவர்க்கு.
விளக்கவுரை :
5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன
போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம்
புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே
மாந்தர் தொழில்.
விளக்கவுரை :
