முல்லைப் பாட்டு 81 - 103 of 103 அடிகள்



முல்லைப் பாட்டு 81 - 103 of 103 அடிகள்

81. நெடுஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு
நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு
மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து
மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து
பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல

விளக்கவுரை :

86. விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து
முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி
யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ,
ளஞ்செவி நிறைய வாலின, வென்றுபிறர்
வேண்டுபுலங் கவர்ந்த வீண்டுபெருந் தாநையொடு

விளக்கவுரை :

91. விசயம் வெல்கொடி யுயர், வலனேர்பு
வயிரும் வளையு மார்ப்ப, வயிர
செறியிலைக் காயா வஞ்சன மலர
முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக்,
கோடற் குவிமுகை யங்கை யவிழத்,

விளக்கவுரை :

96. தோடார் தோன்றி குருதி பூப்பக்,
கான நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற்
றிரிமருப் பிரலையொடு மாடமா னுகள,
வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின்

விளக்கவுரை :

101. முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத்
துனைபரி துரக்குஞ் செலவினர்
வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.

விளக்கவுரை :

முல்லைப் பாட்டு முற்றும்.

முல்லைப் பாட்டு, நப்பூதனார், பத்துப்பாட்டு, mullai paattu, nappuuthanaar, paththu paattu, tamil books