குறிஞ்சிப் பாட்டு 1 - 20 of 261 அடிகள்


குறிஞ்சிப் பாட்டு 1 - 20 of 261 அடிகள்

பாடியவர்                         : கபிலர்
திணை                            : குறிஞ்சி
துறை                             : அறத்தொடு நிற்றல்
பாவகை                          : ஆசிரியப்பா
மொத்த அடிகள்               : 261

1. அன்னாய் வாழிவேண் டன்னை யொண்ணுத
லொலிமென் கூந்தலென் றோழி மேனி
விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ
யகலு ளாங்க ணறியுநர் வினாயும்
பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும்
வேறுபல் லுருவிற் கடவுட் பேணி
நறையும் விரயு மோச்சியு மலவுற்
றெய்யா மையலை நீயும் வருந்துதி
நற்கவின் தொலையவு நறுந்தோ ணெகிழவும்
புட்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவு

விளக்கவுரை :

11. முட்கரந் துறையு முய்யா வரும்படர்
செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்
முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ்
சால்பும் வியப்பு மியல்புங் குன்றின்
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்த
லாசறு காட்சி யையர்க்கு மந்நிலை
யெளிய வென்னார் தொன்மருங் கறிஞர்
மாதரு மடனு மோராங்குத் தணப்ப
நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி

விளக்கவுரை :

குறிஞ்சிப் பாட்டு, கபிலர், பத்துப்பாட்டு, kurinji paattu, kabilar, paththu paattu, tamil books