முல்லைப் பாட்டு 41 - 60 of 103 அடிகள்



முல்லைப் பாட்டு 41 - 60 of 103 அடிகள்

41. பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து
வாங்குவில் லரண மரணமாக,
வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர்
நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு,
குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்

விளக்கவுரை :

46. திரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
கையமை விளக்க நந்துதொறு மாட்ட
நெடுநா வெண்மணி1 நிழத்திய2 நடுநா,

விளக்கவுரை :

51. ளதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர்
சிதர்வர லசைவளிக் கசைவந் தாங்குத்
துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப்
பெருமூ தாள ரேமஞ் சூழப்,
பொழுதளந் தறியும் பொய்யா மாக்க

விளக்கவுரை :

56. டொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி,
"யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்
குறுநீர்க் கன்ன லினைத்" தென்றிசைப்ப,
மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து

விளக்கவுரை :

முல்லைப் பாட்டு, நப்பூதனார், பத்துப்பாட்டு, mullai paattu, nappuuthanaar, paththu paattu, tamil books