முல்லைப் பாட்டு 61 - 80 of 103 அடிகள்



முல்லைப் பாட்டு 61 - 80 of 103 அடிகள்

61. வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற்
றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞா
ணெழினி வாங்கிய வீரறைப் பள்ளியு,
ளுடம்பி நுரைக்கு முரையா நாவிற்

விளக்கவுரை :

66. படம்புகு மிலேச்ச ருழையராக,
மண்டமர் நசையொடு கண்படை பெறாஅ,
தெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்ந்து
பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப்
பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத்

விளக்கவுரை :

71. தேம்பாய் கண்ணி நவ்வலந் திருத்திச்
சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந், தோறுமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த்
துண்ணா துயங்கு மாசிந் தித்து
மொருகை பள்ளி யொற்றி யொருகை

விளக்கவுரை :

76. முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து
பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விர
னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி
யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை,
யின்றுயில் வதியுநற் காணா டுயருழந்து,

விளக்கவுரை :

முல்லைப் பாட்டு, நப்பூதனார், பத்துப்பாட்டு, mullai paattu, nappuuthanaar, paththu paattu, tamil books