கலித்தொகை 61 of 150 தொகைகள்


கலித்தொகை 61 of 150 தொகைகள்

61. எல்லா! இஃது ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்;
செல்வம் கடைகொளச், சாஅய்ச், சான்றவர்
அல்லல் களை தக்க கேளிர் உழைச் சென்று
சொல்லுதல் உற்று, உரைகல்லாதவர் போலப்
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின்
மெல்ல இறைஞ்சும் தலை;

விளக்கவுரை :

எல்லா! நீ, முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை;
நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்!
என் நீ பெறாதது? ஈது என்?

விளக்கவுரை :

சொல்லின், மறாது ஈவாள் மன்னோ, இவள்?
செறாஅது, ஈதல் இரந்தார்க்கு, ஒன்று ஆற்றாது வாழ்தலின்,
சாதலும் கூடுமாம் மற்று;

விளக்கவுரை :

இவள் தந்தை, காதலின் யார்க்கும் கொடுக்கும் விழுப் பொருள்;
யாது நீ வேண்டியது;

விளக்கவுரை :

பேதாய்! பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை
அருளீயல் வேண்டுவல், யான்;

விளக்கவுரை :

'அன்னையோ!' மண்டு அமர் அட்ட களிறு அன்னான், தன்னை ஒரு
பெண்டிர் அருளக் கிடந்தது எவன் கொலோ?

விளக்கவுரை :

ஒண் தொடீ! நாண் இலன் மன்ற; இவன்;
ஆயின், ஏஎ!

விளக்கவுரை :

'பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி,
மல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறு நுதல்
நல்காள் கண்மாறிவிடின்' எனச் செல்வான் - நாம்
எள்ளி நகினும் வரூஉம்; இடை இடைக்
கள்வர் போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது
கொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன்
உள்ளம் குறைபடா ஆறு.

விளக்கவுரை :

கலித்தொகை, பெருங்கொடுங்கோன், கபிலர், மருதநிலங்கன், kalithogai, perungodungoan, kabilar, maruthanilangan, ettu thogai, tamil books