621. இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையின்
பெயர்வோற்கு,
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண்
டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்
பொன்னினும் மணியினும் புனைந்தன
ஆயினும்
நுண்வினைக் கம்மியர் காணா மரபின,
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
631. துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின, இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்துஆங்கு
உயர்ந்தோர் ஏத்தும்
அரும்பெறல் மரபின் மண்டபம்
அன்றியும்,
வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப்
பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க்
காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத்
தலைஏற்றிக்
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
விளக்கவுரை :

