41. வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
ஆர்அஞர் உற்ற வீரபத் தினிமுன்
மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
கொதியழல் சீற்றம் கொங்கையின்
விளைத்தோய்
முதிர்வினை நுங்கட்கு முடிந்தது
ஆகலின்
முந்தைப் பிறப்பில் பைந்தொடி
கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது ஆகலின்
வார்ஒலி கூந்தல்நின் மணமகன் தன்னை
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
51. ஈர்ஏழ் நாளகத்து எல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்எனக்
கோட்டம்இல் கட்டுரை கேட்டனன் யான்என,
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று
ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர்
ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச்
செய்யுள்என,
விளக்கவுரை :