1961. கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு
இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது
சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக்
குமரியைச்
சிறுவெள் ளரவின் குருளைநாண்
சுற்றிக்
குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி
இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து
வளைவெண் கோடு பறித்து மற்றது
முளைவெண் திங்க ளென்னச் சாத்தி
மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து
பெற்ற
மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
1971. வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து
உரிவை மேகலை உடீஇப் பரிவொடு
கருவில் வாங்கிக் கையகத்துக்
கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்
பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக்
கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும்
பந்துங் கழங்குந் தந்தனர் பரசி
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ்
சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை
மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
விளக்கவுரை :