1921. ஐஞ்சி லோதியை அறிகுவன் யானெனக்
கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின்
வனசா ரிணியான் மயக்கஞ் செய்தேன்
புனமயிற் சாயற்கும் புண்ணிய
முதல்விக்கும்
என்திறம் உரையா தேகென் றேகத்
தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந்
தாங்கு
அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து
மீதுசெல் வெங்கதிர் வெம்மையின்
தொடங்கத்
தீதியல் கானஞ் செலவரி தென்று
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
1931. கோவலன் றன்னொடும் கொடுங்குழை மாதொடும்
மாதவத் தாட்டியும் மயங்கதர்
அழுவத்துக்
குரவமும் மரவமும் கோங்கமும்
வேங்கையும்
விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை
ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது
மாரி வளம்பெறா வில்லேர் உழவர்
கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி
வேற்றுப்புலம் போகிநல் வெற்றங்
கொடுத்துக்
கழிபே ராண்மைக் கடன்பார்த்
திருக்கும்
விழிநுதற் குமரி விண்ணோர் பாவை
விளக்கவுரை :