1881. மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்
இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்
பிறந்த பிறப்பிற் காணா யோநீ
வாய்மையின் வழாது மன்னுயி
ரோம்புநர்க்கு
யாவது முண்டோ எய்தா அரும்பொருள்
காமுறு தெய்வங் கண்டடி பணிய
நீபோ யாங்களும் நீள்நெறிப்
படர்குதும்
என்றம் மறையோற் கிசைமொழி
யுணர்த்திக்
குன்றாக் கொள்கைக் கோவலன் றன்னுடன்
அன்றைப் பகலோர் அரும்பதித் தங்கிப்
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
1891. பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாட்
கருந்தடங் கண்ணியும் கவுந்தி
யடிகளும்
வகுந்துசெல் வருத்தத்து வழிமருங்
கிருப்ப
இடைநெறிக் கிடந்த இயவுகொள்
மருங்கின்
புடைநெறிப் போயோர் பொய்கையிற்
சென்று
நீர்நசைஇ வேட்கையின் நெடுந்துறை
நிற்பக்
கானுறை தெய்வம் காதலிற் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவனென
வயந்த மாலை வடிவில் தோன்றிக்
கொடிநடுக் குற்றது போல ஆங்கவன்
விளக்கவுரை :