121. பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளொடு உயர்ந்தோங்கு
செல்வத்தான்
வருநிதி பிறர்க்குஆர்த்தும்
மாசாத்து வான்என்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு
அகவையான்,
அவனுந்தான்,
மண்தேய்த்த புகழினான் மதிமுக
மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப்
பாராட்டிக்
கண்டுஏத்தும் செவ்வேள்என்று
இசைபோக்கிக் காதலால்
கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன்என்
பான்மன்னோ.
அவரை,
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
131. இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
மணஅணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணிஇழையார்
மேல்இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்.
அவ்வழி,
முரசுஇயம்பின, முருகுஅதிர்ந்தன,
முறைஎழுந்தன பணிலம்,வெண்குடை
அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன,
அகலுள்மங்கல அணிஎழுந்தது.
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
விளக்கவுரை :