101. வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கிப் பரந்துஒழுக லான்.
(மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா)
ஆங்கு,
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய
பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர்
உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.
அதனால்,
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
111. நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர்
அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன்
குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு
அகவையாள்,
அவளுந்தான்,
போதில்ஆர் திருவினாள் புகழுடை
வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம்இவள்
திறம்என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய
பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன்
பாள்மன்னோ,
ஆங்கு,
விளக்கவுரை :