வளையாபதி 66 - 70 of 73 பாடல்கள்

வளையாபதி 66 - 70 of 73 பாடல்கள்

valayapathi

66. தொழுமகன் ஆயினும் துற்றுடை யானைப்
பழுமரம் சூழ்ந்த பறவையின் சூழ்ப
விழுமிய ரேனும் வெறுக்கை உலந்தால்
பழுமரம் வீழ்ந்த பறவையின் போப.

விளக்கவுரை :

67. பொருள்இல் குலனும் பொறைமைஇல் நோன்பும்
அருள்இல் அறனும் அமைச்சுஇல் அரசும்
இருளினுள் இட்ட இருண்மையிது என்றே
மருள்இல் புலவர் மனம்கொண்டு உரைப்ப.

விளக்கவுரை :

[ads-post]

[சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாக வருபவை]

68. துக்கம் துடைக்கும் துகளறு காட்சிய
நிக்கந்த வேடத்து இருடி கணங்களை
ஒக்க அடிவீழ்ந்து உலகியல் செய்தபின்
அக்கதை யாழ்கொண்டு அமைவரப் பண்ணி.

விளக்கவுரை :

[சிலம்பு: கனாத்திறம்: 13-க்கு மேற்கோளாகச் சொல்லப்பட்டது]

69. பண்ணால் திறத்தில் பழுதின்றி மேம்பட்ட
தொண்ணூற்று அறுவகைக் கோவையும் வல்லவன்
விண்ணாறு இயங்கும் விறலவர் ஆயினும்
கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான்.

விளக்கவுரை :

[சிலம்பு: கனாத்திறம்: 14-க்கு மேற்கோளாகச் சொல்லப்பட்டது]

70. அன்றைப் பகற்கழிந் தாள் இன்று இராப்பகற்கு
அன்றில் குரலும் கறவை மணிகறங்கக்
கொன்றைப் பழக்குழல் கோவலர் ஆம்பலும்
ஒன்றல் சுரும்பு நரம்பென ஆர்ப்பவும்.

விளக்கவுரை :

[சிலம்பு: ஆய்ச்சியர்குரவை: 3-க்கு மேற்கோளாகச் சொல்லப்பட்டது]

வளையாபதி, valayaapathi, tamil books